undefined
undefined
Lishisithran
காதல் மழை மனதில் வீழ்ந்ததும்
காமம் அதில் கரைந்து போனதே
காலம் உனை காட்டிவிட்டதால்
வாழ்நாள் இனி உன்னை நோக்கியே
தாளம் போட்டு உந்தன் பெயரினை
எந்தன் உள்ளம்  இசைத்து பாடுதே
வீழும் ஓர் பனியின் துளியிலும்
கயல்விழியே உன் எழில் வதனமே
புதிரான உணர்வு வந்ததால்
வெறுமையும் மறைந்து போனதே
நேசத்தின் வாசம் வீசிட
சுவாசமும் புது சுகத்தில் லயித்ததே
எனக்குள் புது நாணம் பூத்ததே
இதயம் அதை அழகாய் ஏற்றதே
உன் பார்வை என்னை நோக்கிட
நெஞ்சம் அந்த நொடியில் தோற்றதே
அதனால்தான் எந்த நேரமும்
என் பேனா உன்னை கிறுக்குதோ?
உன் எண்ணம் வந்து சேர்ந்ததால்
வன்மங்கள் வருகை நின்றது
பெண் என்றால் போதை படைப்பென்ற
உண்மை இன்று உன்னால் புரிந்தது
என்னவளாய் நீ வரவென்று
கண்ணோடு கனவும் குவிந்தது.

0 Responses

Post a Comment