undefined
undefined
Lishisithran
உனக்காக நான் வாழ்வேன்..........
உயிரற்று இருந்தேன் உறவே..!
உயிர்கொடுக்க வந்தாய்......
வலி கூட வசந்தமாச்சு - நீ
என் வாசல் தேடி வந்த வேளை....
என் உலகம் நீ தான் என்று
எண்ணியிருந்த வேளை
துன்பத்தை தந்து
தூர தேசம் சென்றதென்ன?
மறக்காது மனது
என் மனம் புகுந்த உன்னை - உறவே
உனக்காக நான் வாழ்வேன்......
நீ தான் என் பொன் வசந்தம்
காத்திருக்கும் என் இதயம்.....
உன் விழிகள் பேசிய மொழியில் - நான்
வார்த்தையற்று ஊமையானேன்.....
அளவில்லா அன்பு தந்து
அர்த்தமுள்ள வாழ்வும் தந்தாய்.....
புனிதனாக நீ இருப்பதால்
புனிதமாக வாழ்ந்திடுவேன்...
ஒவ்வொரு அசைவிலும்
உன் முகம்பார்த்து......
ஒவ்வொரு மூச்சிலும்
உன் பெயர் கேட்டு.....
செல்லும் உயிர் நாடித்
துடிப்பெல்லாம் உனக்காகவே......
நீயில்லாத வாழ்வு
இருள் நிறைந்த பகலாகவும்
ஒளி நிறைந்த இரவாகவும்
கழிகிறது.......உறவே!
இணைந்த நம் இதயங்கள்
இசைபாடி வாழ்ந்திடட்டும் - என்றும்
உனக்காக நான் வாழ்வேன்.......
0 Responses

Post a Comment