Lishisithran
உனக்காக நான் வாழ்வேன்..........
உயிரற்று இருந்தேன் உறவே..!
உயிர்கொடுக்க வந்தாய்......
வலி கூட வசந்தமாச்சு - நீ
என் வாசல் தேடி வந்த வேளை....
என் உலகம் நீ தான் என்று
எண்ணியிருந்த வேளை
துன்பத்தை தந்து
தூர தேசம் சென்றதென்ன?
மறக்காது மனது
என் மனம் புகுந்த உன்னை - உறவே
உனக்காக நான் வாழ்வேன்......
நீ தான் என் பொன் வசந்தம்
காத்திருக்கும் என் இதயம்.....
உன் விழிகள் பேசிய மொழியில் - நான்
வார்த்தையற்று ஊமையானேன்.....
அளவில்லா அன்பு தந்து
அர்த்தமுள்ள வாழ்வும் தந்தாய்.....
புனிதனாக நீ இருப்பதால்
புனிதமாக வாழ்ந்திடுவேன்...
ஒவ்வொரு அசைவிலும்
உன் முகம்பார்த்து......
ஒவ்வொரு மூச்சிலும்
உன் பெயர் கேட்டு.....
செல்லும் உயிர் நாடித்
துடிப்பெல்லாம் உனக்காகவே......
நீயில்லாத வாழ்வு
இருள் நிறைந்த பகலாகவும்
ஒளி நிறைந்த இரவாகவும்
கழிகிறது.......உறவே!
இணைந்த நம் இதயங்கள்
இசைபாடி வாழ்ந்திடட்டும் - என்றும்
உனக்காக நான் வாழ்வேன்.......
Lishisithran
காதல் மழை மனதில் வீழ்ந்ததும்
காமம் அதில் கரைந்து போனதே
காலம் உனை காட்டிவிட்டதால்
வாழ்நாள் இனி உன்னை நோக்கியே
தாளம் போட்டு உந்தன் பெயரினை
எந்தன் உள்ளம் இசைத்து பாடுதே
வீழும் ஓர் பனியின் துளியிலும்
கயல்விழியே உன் எழில் வதனமே
புதிரான உணர்வு வந்ததால்
வெறுமையும் மறைந்து போனதே
நேசத்தின் வாசம் வீசிட
சுவாசமும் புது சுகத்தில் லயித்ததே
எனக்குள் புது நாணம் பூத்ததே
இதயம் அதை அழகாய் ஏற்றதே
உன் பார்வை என்னை நோக்கிட
நெஞ்சம் அந்த நொடியில் தோற்றதே
அதனால்தான் எந்த நேரமும்
என் பேனா உன்னை கிறுக்குதோ?
உன் எண்ணம் வந்து சேர்ந்ததால்
வன்மங்கள் வருகை நின்றது
பெண் என்றால் போதை படைப்பென்ற
உண்மை இன்று உன்னால் புரிந்தது
என்னவளாய் நீ வரவென்று
கண்ணோடு கனவும் குவிந்தது.
Lishisithran
இருமனம் சேர்வது இங்கு
தேவன் சொன்னதா - காதல்
தூதன் சொன்னதா புரியவில்லை
ஆனால் அன்பே
இருமனம் சேர்வதென்பது
என் இதயத்து ஜீவன் சொன்னது.
நல்ல பூவுக்குள் மணமும்
இனிய தேனுக்குள் சுவையும்
வானுக்குள்ளிருந்து
பொழிகின்ற நல் மழையும்
உன் முகத்து புன்னகையின் அழகும்
வகுத்து வைத்துப் படைத்த இறை
உன் மனதின் உண்மையை
ஓயாது அதில் ஒளிரும் வெண்மையை
என்றும் காயாத ஈரத்தை
படைத்தானே அவன் வாழி...
Lishisithran
உன் நேசம் கண்டு
உள்ளம் குளிர்ந்தேன்
என் வாழ்வில் நேசம்
நீதான் என்று...
உள்ளம் எல்லாம் உன்னை கொண்டு
உன்னிலே உண்மையாகி
கற்பனைகள் பல கட்டி
தூக்கத்திலும் கூட
உன்னை நினைத்து மெய்சிலிர்த்தேன்
என்னையும் நேசிக்கும் உறவு ஒன்று
இந்த உலகில் உண்டு என்று
உனக்காக இதயமெல்லாம்
அன்பை சேகரித்தேன் - இன்று
கரையை தொடும் அலைபோல்
வந்து வந்து செல்கிறாய் நீ
அன்பையும் கொடுக்க மறுக்கிறாய் நீ
என் அன்புக்குரியவளே
நீ காட்டிய அன்பினில்
உயிர் மீண்ட உடல் இது
உன் அன்பின்றி போனால்
உயிர் இருந்தும்
நடைபிணம்தான் என் உடல்
Lishisithran
வாசலில் வைத்து
வழியனுப்பி வைக்கும் பிரிவைப்போல
நிச்சயம் மறந்தேயாக வேண்டுமென்று
மனம் விரும்பும்
நினைவுகளைக் கடந்துசெல்ல
முடியவில்லை !......
பழகிப்போன உறவென்றாலும்
சுயநினைவு தவறும் நாளொன்றில்
தலை கோதிவிட தயங்கும்
பயங்கொண்ட மனதைப்போல
வரும் தைரியத்தையும்
இழுத்துப் போர்த்திவிடுகிறது
வாசலோடு விட்டுப்போன
கசப்பான அனுபவங்கள் !......
இருந்தபோதும் விடைபெறும்
இறுதி நாளன்று
என் நாடி நரம்பெல்லாம்
ஊறிக்கிடக்கும் குருதிகளையெல்லாம்
உறிஞ்சி எடுத்துவிடுகிறது பதியப்படாத
நாட்குறிப்பில் ஏறியிருக்கும் உன் புன்னகை !
Lishisithran
காதல் மழை மனதில் வீழ்ந்ததும்
காமம் அதில் கரைந்து போனதே
காலம் உனை காட்டிவிட்டதால்
வாழ்நாள் இனி உன்னை நோக்கியே
தாளம் போட்டு உந்தன் பெயரினை
எந்தன் உள்ளம் இசைத்து பாடுதே
வீழும் ஓர் பனியின் துளியிலும்
கயல்விழியே உன் எழில் வதனமே
புதிரான உணர்வு வந்ததால்
வெறுமையும் மறைந்து போனதே
நேசத்தின் வாசம் வீசிட
சுவாசமும் புது சுகத்தில் லயித்ததே
எனக்குள் புது நாணம் பூத்ததே
இதயம் அதை அழகாய் ஏற்றதே
உன் பார்வை என்னை நோக்கிட
நெஞ்சம் அந்த நொடியில் தோற்றதே
அதனால்தான் எந்த நேரமும்
என் பேனா உன்னை கிறுக்குதோ?
உன் எண்ணம் வந்து சேர்ந்ததால்
வன்மங்கள் வருகை நின்றது
பெண் என்றால் போதை படைப்பென்ற
உண்மை இன்று உன்னால் புரிந்தது
என்னவளாய் நீ வரவென்று
கண்ணோடு கனவும் குவிந்தது.
Lishisithran
ஆசை காட்டுவது காதல்
அன்பு காட்டுவது நட்பு !
உயிரை எடுப்பது காதல்
உயிரை கொடுப்பது நட்பு !
தோளில் ஏறி சுமையாக இருப்பது காதல்
சுமைக்காக தோளை கொடுப்பது நட்பு !
சங்கடப்படுத்துவது காதல்
சங்கடத்திலும் சந்தோசப்படுத்துவது நட்பு !
அறுத்து விடுவது காதல்
அரவணைப்பது நட்பு !
அழவைப்பது காதல்
ஆறுதல் சொல்வது நட்பு
Lishisithran
பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!
Lishisithran
உன்னை
பார்க்கும் வரை
காதல் என்ற சொல் இனிக்கவில்லை
உன்னை
பார்த்த பின்பு
காதலை விட இனிப்பான சொல் வேறில்லை ...
உன்
விழிமட்டும் பார்திருந்தால்
என்
வாழ்வில் பசி இருக்காது ...
உன்
விழி பார்க்காமல் இருந்திருந்தால்
என்
வாழ்வில் ஒளி பிறந்திருக்காது ...
நாம்
விரல் கோர்த்திருந்தால்
இன்னொரு கிரகத்தில் பூ பூக்கும் ...
நாம்
விரல் சேராதிருந்தால்
இப்பூமியில் பூகம்பம் வெடிக்கும் ...
பெண்ணே !
காதல்
நம்மை சொர்க்கத்திற்கு
கூட்டிசெல்லும் தொடர்வண்டி ...
அது தொடரட்டும்
நாம் வாழ்நாள் எல்லாம் தாண்டி !